துறைமுகத்தால் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் இதர ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து துறைமுக பணியாளர்களும் இதில் அடங்குவர்.
கொவிட்-19 காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அனைத்து முக்கிய துறைமுகங்களும் தங்கள் பணியாளர்களை சார்ந்திருப்பவர்களுக்கு அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இழப்பீடு/கருணைத் தொகை வழங்கலாம் என கப்பல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
தொழிலாளர் பிரிவு | இழப்பீடு / கருணைத் தொகை (ரூபாயில்) |
---|---|
துறைமுகத்தால் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறைமுகப் பணியாளர்கள் | ரூ. 50.00 லட்சம் |
இதர ஒப்பந்தத் தொழிலாளர்கள் | ரூ. 50.00 லட்சம் |
துறைமுகம் சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் போது கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் உயிருக்கு ஏற்படும் பாதிப்பை ஈடுகட்ட இந்த நிதியுதவி அறிவிக்கப்படுகிறது. கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்கும்/இழப்பீடு வழங்கலுக்கும்/கருணைத் தொகைக்கும் மற்றும் கொவிட்-19 தான் இறப்புக்கு காரணம் என்று சான்றளிப்பதற்கும் துறைமுகத்தின் தலைவர் தான் உரிய அதிகாரி ஆவார். கொவிட்-19க்கு மட்டுமே பொருந்தும் இந்த இழப்பீடு 30.09.2020 வரை அமலில் இருக்கும், அதன் பின்னர் இது மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
Also Read : Rs.50 lakh compensation declared for the Port employees in case of loss of life due to COVID-19